அறியா அடிமை
By Admin - 18 May 2021 783 0

இருட்டில் வெளிச்சமாய்
கண்கள் தெரிய
அந்த வெளிச்சம் கொண்டு
ஈரம் படிந்த உதடுகளை
மின்மினியென காண
கண்ட அந்த மின்மினி இதழ்களை
சுவைத்து உண்ண
கண்கள் கிறங்கி
இமைகள் மூட
வெளிச்சம் மறைந்து
இருளில் இதழ்களின்
இசை மட்டும் ஒலித்தது!
மௌன மோகங்கள்
சத்தமில்லாமல் சத்தமிட
உடல்கள் உஷ்ணத்தால்
அமிர்தத்தை சிந்த!
சிந்திய அமிர்தம்
உடலெங்கும் சங்கமிக்க
உஷ்ணத்தின் உஷ்ணம்
உடல்களை
குளிரச்செய்கின்றது!
குளிர்ந்த அக்னியில்
ஆண்மையும் பெண்மையும்
ஓருயிராக
சங்கமிக்க!
அந்த அணையா
அக்னியை!
பெண்மை வாரியணைத்து
அணைகின்றது!
ஆண்மை பெண்மைக்குள்
அடிமையாய் அகப்பட்டு
அவளுக்கு தலைதாழ்த்தி
தலைவணங்குகின்றது!
காலம்போய காலமாய்
எப்பொழுதும் அடிமையென்று
அறியா அடிமையாய்
ஆண்மை...
நான் எழுதியதை என்ன வென்று வரையறுப்பது என்று எனக்கு தெரியவில்ல,
எனினும் எழுதியது நான் என்கின்ற,
சிவராஜ் பரமேஸ்வரன்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 May 2021
ஒரு மொட்டை மாடி கதை - அத்தியா...
அத்தியாயம் 1 படிக்க இங்கு click செய்யவும் காதலிக்கும் பெண்ணின்கைகள் தொட்டு நீட்டினால்சின்ன தகரம் கூட தங்கம் தானேகாதலிக்கும் பெண்ணின்வண்ண கண...
20 May 2021
கொரோனா பயம் ...
நண்பர் ஒருவரது குடும்பம் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 முதல் இந்நாள் வரையில் வெளி உலகம் பார்த்ததில்லை. சரி அவர்கள் ஏதோ காரணம் கொண்டு நோய்த்தொ...
18 Sep 2021
காலம் கடந்த காதல் கதை - அத்திய...
காலம் கடந்த காதல் - அத்தியாயம் 1 படிக்க இங்கு கிளிக் செய்யவும்மன்னிக்கவும் நான் ஒரு பெரும் சோம்பேறி! அதிலும் ஒரு உண்மை கதை சாரி பொய் கதை எழுத வேண்டும்...