நித்யஷாந்தி

By Admin - 20 May 2021 836 0

நான் நித்யஷாந்தி  
அடைய விரும்புகிறேன்!
என்னால் இந்த வேறுபட்ட 
மனநிலையில் வாழ இயலவில்லை!
இச்சை ஒரு புறம்!
ஈகை ஒரு புறம்!
பிராத்தனைகள் செயல்படவில்லை!
செயல்படுத்த முடியவில்லை!
இச்சைகளின் இம்சைகள் தலைக்கேறி
ருத்ரதாண்டவம் அடுக்கின்றது! 
நான் என்ன தவறு செய்தேன்?
ஏன் எனக்கு மட்டும் 
இந்த இச்சை நோய்! 
உடல்கூறுகள் என்சொல் கேளாமல் 
இச்சை படி நடக்க 
நான் அடிமை ஆகிவிட்டேனே!!
இச்சை இச்சை 
இச்சை இச்சை 
இச்சை இச்சை 
காதுகளில் ரீங்காரம் அடிக்க 
எனது கனவு கலைந்து 
தூங்கி எழுகின்றேன்!!

கலைந்த தூக்கத்துடன்,
சிவராஜ் பரமேஸ்வரன் 

Add Your Comments

Say Something

 

Comments

No comments.